Saturday, July 2, 2011

தெய்வமானவள் !

தம்பி நீ முத்துபோன்றவன் அல்ல ! ஏன் எனில் ! உன் தாய் சிப்பி அல்ல ! அவள் ஒரு சமுத்திரம் !
நீ பூவை போன்றவன் அல்ல ஏன் எனில்
உன் தாய் ஒரு செடி அல்ல !அவள் ஒரு
ஆலமரம் !
நீ மின்னும் நட்சத்திரம் அல்ல !ஏன் எனில்
உன் தாய் ஒரு சூரியன் அல்ல ! அவளே
அண்டம் !
நீ அழகான கவிதை அல்ல ! ஏன் எனில் உன் தாய் ஒரு கவி அல்ல ! அவளே அகரம் !
நீ சாதரணமானவன் அல்ல ! உன் தாய் தாய் மட்டும் அல்ல ! அவள் ஒரு தெய்வம் !

Thursday, June 16, 2011

வாழ்க்கை!

சுக துக்கங்களை செயல்முறை பாடமாக
சொல்லித்தரும் ஒரு பல்கலைகழகம் !
பிறப்பு இறப்புக்கு இங்கே பதிவு உண்டு !
பணத்துக்கு மட்டுமே மதிப்பு உண்டு !
நாம் சுற்றும் இவ்வுலகம் நம்மை நாம்
உணர்தபின் நம்மை சுற்றும் இவ்வுலகம் !
உன்னை மட்டுமே நீ யோசித்தால்
உலகத்தின் பிடியில் நீ!
உலகத்தை பற்றி யோசித்தால்
உன் பிடியில் இவ்வுலகம் !

Friday, January 28, 2011

இயல்பு !

பூவின் வாசனை !
புழுவின் நெளிவு !
பூமியின் சுழற்சி !
நீரின் குளுமை !
நெருப்பின் வெம்மை !
பாடகனின் சாரீரம்!
பாவனை செய்பவனின் சரீரம்!
இசைபவனின் செவி !
சிற்பியின் பார்வை !
இவை அனைத்தும் இயல்பு !-இனிய இதயமே உன் துடிப்பு
உயிரோட்டத்தின் இயல்பு!
இதயம் உள்ள உயிரே - உன் இயல்பு
அன்பு!