Saturday, July 2, 2011

தெய்வமானவள் !

தம்பி நீ முத்துபோன்றவன் அல்ல ! ஏன் எனில் ! உன் தாய் சிப்பி அல்ல ! அவள் ஒரு சமுத்திரம் !
நீ பூவை போன்றவன் அல்ல ஏன் எனில்
உன் தாய் ஒரு செடி அல்ல !அவள் ஒரு
ஆலமரம் !
நீ மின்னும் நட்சத்திரம் அல்ல !ஏன் எனில்
உன் தாய் ஒரு சூரியன் அல்ல ! அவளே
அண்டம் !
நீ அழகான கவிதை அல்ல ! ஏன் எனில் உன் தாய் ஒரு கவி அல்ல ! அவளே அகரம் !
நீ சாதரணமானவன் அல்ல ! உன் தாய் தாய் மட்டும் அல்ல ! அவள் ஒரு தெய்வம் !