Saturday, July 24, 2010

பூக்கள் மீண்டும் பூப்பதில்லை !

உதிர்த்துவிட்ட இதழ்களை ஒட்டிக்கொண்டு மீண்டும் இங்கே
பூக்கள் பூப்பதில்லை!
மடிந்துவிட்ட வண்ணத்துப் பூச்சி
மீண்டும் உயிர்ப்பித்து
பறப்பது யில்லை !
சிதறிவிட்ட சிலைகள் கூட
மீண்டும் உருபெற்று
உருவம்பெருவது இல்லை
இழந்துகொண்டு இருக்கிறாய் நீயும் உணர்ந்து விடு !உயிரின் மதிப்பை!
இந்த ஒரு நிமிடம் கவலை மறந்து வாழ்த்தி விடு !வாழ்ந்து விடு!

Friday, July 23, 2010

செலவு செயுங்கள் !

மழை துளியை சேகரித்து
கடலை பெறலாம் !
மண்ணை சேகரித்து
மாளிகை பெறலாம் !
தீபங்களை சேகரித்து
சூரியன் பெறலாம்!
எழுத்துக்களை சேகரித்து
கவிதை பெறலாம் !
வண்ணங்களை சேகரித்து
ஓவியம் பெறலாம்!- ஆனால்
அன்பை செலவு செய்தால்தான்
வாழ்வில் இன்பம் பெறலாம் !

Thursday, July 8, 2010

என்ன தவம் செய்தேனோ?

மொட்டுவிட்ட பூக்களின் மூச்சுக்காற்றை சேகரித்து
என் உயிராக்கி !
பொங்கிவிட்ட தூய அன்பில் ஒரு துளி சேர்த்து
எனை உருவாக்கி !
செந்நிற மெத்தையிலே சித்திரமாய் வளர்த்து !
பத்துத்திங்கள் கழித்து பத்திரமாய் பெற்றெடுத்து!
மகள் என்ற உறவாக்கி!
உள்ளங்கையில் உலகத்தை கொடுத்து !
உயர்ந்த ஞானத்தைக் கொடுத்து !
எக்குறையும் இல்லாது
எனை படைத்த என் பெற்றோரை
பெற்றொராய் பெற்றிருக்க
என்ன தவம் செய்தேனோ?

Sunday, July 4, 2010

காலமே!

காலமே!

* மாறாத மாற்றங்களை

வழங்கிக்கொண்டு !

* திரும்பி வராத நாட்களை

விழுங்கிக்கொண்டு!

* என்றும் தீராத நினைவுகளுடன்

கொஞ்சம் கொஞ்சமாய்

நழுவிக்கொண்டிருக்கும்

காலமே!