Saturday, July 2, 2011

தெய்வமானவள் !

தம்பி நீ முத்துபோன்றவன் அல்ல ! ஏன் எனில் ! உன் தாய் சிப்பி அல்ல ! அவள் ஒரு சமுத்திரம் !
நீ பூவை போன்றவன் அல்ல ஏன் எனில்
உன் தாய் ஒரு செடி அல்ல !அவள் ஒரு
ஆலமரம் !
நீ மின்னும் நட்சத்திரம் அல்ல !ஏன் எனில்
உன் தாய் ஒரு சூரியன் அல்ல ! அவளே
அண்டம் !
நீ அழகான கவிதை அல்ல ! ஏன் எனில் உன் தாய் ஒரு கவி அல்ல ! அவளே அகரம் !
நீ சாதரணமானவன் அல்ல ! உன் தாய் தாய் மட்டும் அல்ல ! அவள் ஒரு தெய்வம் !

Thursday, June 16, 2011

வாழ்க்கை!

சுக துக்கங்களை செயல்முறை பாடமாக
சொல்லித்தரும் ஒரு பல்கலைகழகம் !
பிறப்பு இறப்புக்கு இங்கே பதிவு உண்டு !
பணத்துக்கு மட்டுமே மதிப்பு உண்டு !
நாம் சுற்றும் இவ்வுலகம் நம்மை நாம்
உணர்தபின் நம்மை சுற்றும் இவ்வுலகம் !
உன்னை மட்டுமே நீ யோசித்தால்
உலகத்தின் பிடியில் நீ!
உலகத்தை பற்றி யோசித்தால்
உன் பிடியில் இவ்வுலகம் !

Friday, January 28, 2011

இயல்பு !

பூவின் வாசனை !
புழுவின் நெளிவு !
பூமியின் சுழற்சி !
நீரின் குளுமை !
நெருப்பின் வெம்மை !
பாடகனின் சாரீரம்!
பாவனை செய்பவனின் சரீரம்!
இசைபவனின் செவி !
சிற்பியின் பார்வை !
இவை அனைத்தும் இயல்பு !-இனிய இதயமே உன் துடிப்பு
உயிரோட்டத்தின் இயல்பு!
இதயம் உள்ள உயிரே - உன் இயல்பு
அன்பு!

Tuesday, December 21, 2010

மழை காலம் !

கதிரவன் கண்ணாமூச்சி ஆடும் காலம்!
வானத்தின் நீர் உதிர் காலம் !
கையில் குடை வீடுகள் முளைக்கும் காலம் !
வழியில் குடிசை வீடுகள் மிதக்கும் காலம்!
நிவாரண நிதியில் அரசியல் முதளைகளுக்கு
பண மழைக் காலம்!
பூமி பூக்களை வானம் ஆசிர்வதிக்கும் காலம் !
அளவு மீறினால் பூமி பூக்களுக்கு வானம்
மலர்வளையம் வைக்கும் காலம் !

Thursday, November 18, 2010

இறைவா!

இருட்டுக்குள் வெளிச்சமாய் !
வெளிச்சத்தில் வெப்பமாய் !
வெப்பத்தை உணரும் உடலாய்!
உடலுக்குள் உயிராய்!
எனை நீ தந்தாலும்
உண்மையில் வெறுமையாய் உணர்தேன்
என்னுள் உன்னை -இறைவா !
உணர்வேனோ
உனக்குள் என்னை !