Monday, October 4, 2010

நிழல்

வெளிச்சத்தில் தெரியும் இருட்டு !
இருட்டுக்குள் இறந்து போகும் பிறப்பு !
பிறப்பு முதல் இறப்பு வரை கைவிடாத நட்பு !
நட்பு முதல் பகைமை வரை உலக உயிருக்கெல்லாம் ஒரே சிறப்பு !
அதுவே உண்மையான கடவுளின் இருப்பு !

Monday, September 20, 2010

வறுமை !

இல்லாதவனிடம் இருப்பது !
இருப்பவனிடம் இல்லாதது !
பசித்து உண்பவன் பாக்கியசாலி !
பசிக்காமல் உண்பவன் நோயாளி !
இல்லாமையால் கிழிந்திருக்கும் உடை!
இருந்தும் நாகரீகத்தால் கிழிந்திருக்கும் உடை!
திறந்த வெளியில் மரங்கள் தரும் குளிர்ந்த காற்றில் படுத்தவுடன் உறக்கம் !
குளீருட்டப்பட்ட அறையில் பஞ்சு மெத்தையில் படுத்தாலும் இல்லை உறக்கம்!
இல்லாதவனிடம் இருப்பது இருப்பவனிடம் இல்லாதது
உயிரோட்டம் !
உணர்வு !
உறக்கம்!
இதுவல்லவோ வறுமை !!

Saturday, August 21, 2010

மரமே !

ஆருயிர் காக்கும்
ஓர் உயிரே !
மண்ணை சுவாசித்து
மலர்களாய் பூத்திருக்கும்
மரங்களே !
குழந்தையில் தொட்டிலாய் !
இளமையில் கட்டிலாய்
முதுமையில் உன்று கோலாய்!
உயிரை வளர்க்கும் உணவாய்!
உடலை எரிக்கும் கட்டையாய்!
கடைசிவரை துணை நிற்கும் உன்னை வெட்டி வீழ்த்தும் அரக்கனாய்
பலமுறை இருந்தாலும் நட்டு வளர்க்கும் மனிதனாய்
ஒரு முறையாவது இருக்க விரும்புகிறேன் !

Thursday, August 5, 2010

ரசிகன்

கடவுளே!

*உன்னை வணங்க கோவிலுக்குச் சென்றால்

சிலையாய் நிற்கும் உன்னை

ரசிக்க மட்டுமே முடிகிறது!

உன்னை வடித்த சிற்பியையே

கடவுளாய் வணங்க தோன்றுகிறது !

*மண்ணை படைத்த உன்னைவிட -அதை

குழைத்து குவளை செய்யும் குயவனையே

கடவுளாய் நினைக்க தோன்றுகிறது!

*தமிழ் மொழியை நீ கொடுத்தாலும்

அம்மொழியில் காவியம் கொடுத்த

கடவுள்கள்தான் எத்தனை பேர் ?!

என்னை படைத்து உன்னை உருவாக்கிக்கொண்ட

கடவுளே!

ரசிப்பவன் படைப்பாளியாகின்றான் !

படைத்தவன் நீயாகின்றான் !

நான் நீயாக.........

என்னை ரசிகனாக்கு !!