
Thursday, November 18, 2010
Monday, October 4, 2010
நிழல்
Monday, September 20, 2010
வறுமை !
இல்லாதவனிடம் இருப்பது !இருப்பவனிடம் இல்லாதது !
பசித்து உண்பவன் பாக்கியசாலி !
பசிக்காமல் உண்பவன் நோயாளி !
இல்லாமையால் கிழிந்திருக்கும் உடை!
இருந்தும் நாகரீகத்தால் கிழிந்திருக்கும் உடை!
திறந்த வெளியில் மரங்கள் தரும் குளிர்ந்த காற்றில் படுத்தவுடன் உறக்கம் !
குளீருட்டப்பட்ட அறையில் பஞ்சு மெத்தையில் படுத்தாலும் இல்லை உறக்கம்!
இல்லாதவனிடம் இருப்பது இருப்பவனிடம் இல்லாதது
உயிரோட்டம் !
உணர்வு !
உறக்கம்!
இதுவல்லவோ வறுமை !!
Thursday, August 26, 2010
Saturday, August 21, 2010
மரமே !
ஆருயிர் காக்கும்ஓர் உயிரே !
மண்ணை சுவாசித்து
மலர்களாய் பூத்திருக்கும்
மரங்களே !
குழந்தையில் தொட்டிலாய் !
இளமையில் கட்டிலாய்
முதுமையில் உன்று கோலாய்!
உயிரை வளர்க்கும் உணவாய்!
உடலை எரிக்கும் கட்டையாய்!
கடைசிவரை துணை நிற்கும் உன்னை வெட்டி வீழ்த்தும் அரக்கனாய்
பலமுறை இருந்தாலும் நட்டு வளர்க்கும் மனிதனாய்
ஒரு முறையாவது இருக்க விரும்புகிறேன் !
Friday, August 13, 2010
Thursday, August 5, 2010
ரசிகன்
கடவுளே!
*உன்னை வணங்க கோவிலுக்குச் சென்றால்
சிலையாய் நிற்கும் உன்னை
ரசிக்க மட்டுமே முடிகிறது!
உன்னை வடித்த சிற்பியையே
கடவுளாய் வணங்க தோன்றுகிறது !
*மண்ணை படைத்த உன்னைவிட -அதை
குழைத்து குவளை செய்யும் குயவனையே
கடவுளாய் நினைக்க தோன்றுகிறது!
*தமிழ் மொழியை நீ கொடுத்தாலும்
அம்மொழியில் காவியம் கொடுத்த
கடவுள்கள்தான் எத்தனை பேர் ?!
என்னை படைத்து உன்னை உருவாக்கிக்கொண்ட
கடவுளே!
ரசிப்பவன் படைப்பாளியாகின்றான் !
படைத்தவன் நீயாகின்றான் !
நான் நீயாக.........
என்னை ரசிகனாக்கு !!
Subscribe to:
Posts (Atom)


