Saturday, August 21, 2010

மரமே !

ஆருயிர் காக்கும்
ஓர் உயிரே !
மண்ணை சுவாசித்து
மலர்களாய் பூத்திருக்கும்
மரங்களே !
குழந்தையில் தொட்டிலாய் !
இளமையில் கட்டிலாய்
முதுமையில் உன்று கோலாய்!
உயிரை வளர்க்கும் உணவாய்!
உடலை எரிக்கும் கட்டையாய்!
கடைசிவரை துணை நிற்கும் உன்னை வெட்டி வீழ்த்தும் அரக்கனாய்
பலமுறை இருந்தாலும் நட்டு வளர்க்கும் மனிதனாய்
ஒரு முறையாவது இருக்க விரும்புகிறேன் !

No comments:

Post a Comment