கடவுளே!
*உன்னை வணங்க கோவிலுக்குச் சென்றால்
சிலையாய் நிற்கும் உன்னை
ரசிக்க மட்டுமே முடிகிறது!
உன்னை வடித்த சிற்பியையே
கடவுளாய் வணங்க தோன்றுகிறது !
*மண்ணை படைத்த உன்னைவிட -அதை
குழைத்து குவளை செய்யும் குயவனையே
கடவுளாய் நினைக்க தோன்றுகிறது!
*தமிழ் மொழியை நீ கொடுத்தாலும்
அம்மொழியில் காவியம் கொடுத்த
கடவுள்கள்தான் எத்தனை பேர் ?!
என்னை படைத்து உன்னை உருவாக்கிக்கொண்ட
கடவுளே!
ரசிப்பவன் படைப்பாளியாகின்றான் !
படைத்தவன் நீயாகின்றான் !
நான் நீயாக.........
என்னை ரசிகனாக்கு !!
No comments:
Post a Comment