Thursday, July 8, 2010

என்ன தவம் செய்தேனோ?

மொட்டுவிட்ட பூக்களின் மூச்சுக்காற்றை சேகரித்து
என் உயிராக்கி !
பொங்கிவிட்ட தூய அன்பில் ஒரு துளி சேர்த்து
எனை உருவாக்கி !
செந்நிற மெத்தையிலே சித்திரமாய் வளர்த்து !
பத்துத்திங்கள் கழித்து பத்திரமாய் பெற்றெடுத்து!
மகள் என்ற உறவாக்கி!
உள்ளங்கையில் உலகத்தை கொடுத்து !
உயர்ந்த ஞானத்தைக் கொடுத்து !
எக்குறையும் இல்லாது
எனை படைத்த என் பெற்றோரை
பெற்றொராய் பெற்றிருக்க
என்ன தவம் செய்தேனோ?

No comments:

Post a Comment